/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரபணு மாற்ற நெல் அனுமதிக்கக்கூடாது! உ.உ., கட்சி தலைவர் கண்டனம்
/
மரபணு மாற்ற நெல் அனுமதிக்கக்கூடாது! உ.உ., கட்சி தலைவர் கண்டனம்
மரபணு மாற்ற நெல் அனுமதிக்கக்கூடாது! உ.உ., கட்சி தலைவர் கண்டனம்
மரபணு மாற்ற நெல் அனுமதிக்கக்கூடாது! உ.உ., கட்சி தலைவர் கண்டனம்
ADDED : மே 20, 2025 11:42 PM
- நமது நிருபர் -
''மரபணு மாற்றப்பட்ட நெல் ரகங்கள் அமல்படுத்தப்பட்டால், மிகப்பெரிய விவசாய போராட்டங்கள் நடக்கும்,'' என, உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: கடந்த காலத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகள் அமல்படுத்தப்பட்டு, பல மடங்கு விளைச்சல் அதிகரிக்கும் என்று ஆசை காட்டி பயிரிட வைத்தார்கள்.
அதிக கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகளுக்கு, விளைச்சல் கிடைக்கவில்லை. நோய் தாக்குதல் காரணமாக, விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து தற்கொலை செய்த வரலாறுகளும் நடந்துள்ளன.
மரபணு மாற்றப்பட்ட நெல் ரகமாக இருந்தாலும், கத்தரி, தக்காளி என காய்கறி பயிர்களாக இருந்தாலும், இவற்றை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தப்பட்டது.
மரபணு மாற்றப்பட்ட விதைகள் வாயிலாக காய்கறிகளோ, நெல் உள்ளிட்ட தானியங்களோ உற்பத்தி செய்யப்பட்டால், அதன் மூலம் மண்ணுக்கும் மனித உடலுக்கும் ஆபத்து உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் இது குறித்து தெளிவுபடுத்தியதை தொடர்ந்து, மரபணு மாற்றப்பட்ட விதைகள் தமிழகத்தில் அனுமதிக்கப்படவில்லை. கடந்த காலத்தைப் போன்றே, தற்போது, மரபணு மாற்றப்பட்ட, திருத்தப்பட்ட நெல் ரகங்களை கொண்டுவர முயற்சி நடந்து வருகிறது. மத்திய அரசு இதை திரும்ப பெற வேண்டும்.
இயற்கை வேளாண்மை ஊக்குவித்து, பாரம்பரிய விதை ரகங்களை மீட்டெடுத்து, விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் மானிய திட்டங்களை வழங்கி வரும் பிரதமர் மோடி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அனுமதிக்கக்கூடாது.
இதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலினும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக விவசாயம் மற்றும் மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.