sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேஸ்புக் நண்பனை பார்க்க வந்த ஜெர்மனி இளைஞர்

/

பேஸ்புக் நண்பனை பார்க்க வந்த ஜெர்மனி இளைஞர்

பேஸ்புக் நண்பனை பார்க்க வந்த ஜெர்மனி இளைஞர்

பேஸ்புக் நண்பனை பார்க்க வந்த ஜெர்மனி இளைஞர்


ADDED : ஜூலை 16, 2025 09:43 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 09:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையம் அருகே எல்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன். தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமலஸ்ருதி. இவரது மகன் தயாஸ்ரீ.

கலைச்செல்வனுக்கு பேஸ்புக் வாயிலாக ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஐனீஸ் என்ற இளைஞர் அறிமுகமானார். பொறியாளரான ஐனீஸ், கலைச்செல்வன் உடன் பேஸ்புக்கில் மிகவும் நட்புடன் பழகி வந்தார்.

இதனிடையே இந்த பழக்கத்தை அடிப்படையாக கொண்டு ஜெர்மனி இளைஞர், கலைச்செல்வனை காண கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு நேற்று முன் தினம் இரவு வந்தார். அதன் பின் கலைச்செல்வன் வீட்டிற்கு சென்ற அவர், கலைச்செல்வனின் குடும்பத்தினருடன் புகைப்படங்களை எடுத்தும், அங்கு உணவு அருந்தியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் கலைச்செல்வன் வீட்டிற்கு வந்து ஜெர்மனி நாட்டு இளைஞரை ஆச்சரியமாக பார்த்து சென்றனர். பின், ஐனீஸை மேட்டுப்பாளையத்தில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு பஸ் வாயிலாக கலைச்செல்வன் அனுப்பி வைத்தார்.-----






      Dinamalar
      Follow us