/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமிக்கு திருமணம்; கணவர் மீது 'போக்சோ'
/
சிறுமிக்கு திருமணம்; கணவர் மீது 'போக்சோ'
ADDED : மார் 30, 2025 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; 17 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து கொண்ட, கணவர் மீது போக்சோ வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரசவம் தொடர்பான சிகிச்சை பெற சிறுமி வந்தார். இதையடுத்து, இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். சிறுமியின் கணவர் மீது குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.----