sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'எங்களுக்கு குடிநீர் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு கொடுங்கள்'

/

 'எங்களுக்கு குடிநீர் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு கொடுங்கள்'

 'எங்களுக்கு குடிநீர் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு கொடுங்கள்'

 'எங்களுக்கு குடிநீர் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு கொடுங்கள்'


ADDED : டிச 30, 2025 05:16 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்: 'எங்கள் ஊராட்சிக்கு தேவையான குடிநீரை கொடுத்து விட்டு, வேறு யாருக்கு வேண்டுமானாலும் குடிநீர் கொடுங்கள்' என, பட்டணம் ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது பட்டணம் ஊராட்சி. இங்கு, 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் சப்ளை செய்யப்படாததால், பல ஆண்டுகளாக, மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், தனியார் நிறுவனத்துக்கு குடிநீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பட்டணம் ஊராட்சி மக்கள் மன்ற நிர்வாகி கோவிந்தராஜன் கூறியதாவது:

பட்டணம் ஊராட்சிக்கு தேவையான குடிநீர் வழங்கப்படாததால், நாங்கள் அவதிப்படுகிறோம்.

ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் கூடுதலாக தண்ணீர் வழங்க பலமுறை கோரியும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில், தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீரில் இருந்து, தனியார் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி, தனியாக குடிநீர் குழாய்கள் பதித்து தண்ணீர் கொண்டு செல்ல பணிகள் நடக்கின்றன.

பல ஆண்டுகளாக போராடி வரும் எங்களுக்கு தேவையான குடிநீரை கொடுத்து விட்டு, அதன்பின் வேறு யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள் என, யூனியன் அதிகாரிகளிடம் எங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us