sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நல்லாசிரியர் விருது; ஆசிரியர்கள் குமுறல்

/

நல்லாசிரியர் விருது; ஆசிரியர்கள் குமுறல்

நல்லாசிரியர் விருது; ஆசிரியர்கள் குமுறல்

நல்லாசிரியர் விருது; ஆசிரியர்கள் குமுறல்


ADDED : செப் 11, 2025 10:13 PM

Google News

ADDED : செப் 11, 2025 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; நடப்பு கல்வியாண்டில், கோவையில் மட்டும் 35க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தனர். 13 பேருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்தது. ஆசிரியர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பது அடிப்படை தகுதி. தொடர்ந்து, அவர்கள் பணியாற்றும் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் கூடுதலாக 1 மதிப்பெண் என, ஆசிரியர் பெற்ற பயிற்சிகள், மாணவர்களுக்கான சிறப்பு கற்பித்தல் முறைகள் உள்ளிட்ட, 35 அம்சங்களில், 100 மதிப்பெண் வழங்கப்படும்.

கோவை மாவட்டத்தில் விருதுக்காக விண்ணப்பித்த ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் சரியாக மதிப்பிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்தாண்டு கல்வி அதிகாரிகள், நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பதாரர்களின் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று, அவர்களின் கற்பித்தல் முறை உள்ளிட்ட செயல்பாடுகளை வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவு செய்தனர்.

நடப்பு ஆண்டில் கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேரமின்மை காரணமாக அதிகாரிகள் பள்ளிகளுக்கு செல்லவில்லை; நேரடியாக ஆசிரியர்களை நேர்காணலுக்கு அழைத்ததாக கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விளக்கம் கேட்க, மாவட்ட கல்வி அதிகாரிகளை தொடர்புகொண்டபோது, அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை.






      Dinamalar
      Follow us