/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்து இழப்பீடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி
/
விபத்து இழப்பீடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி
விபத்து இழப்பீடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி
விபத்து இழப்பீடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி
ADDED : ஜன 24, 2025 10:04 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சியில், கோர்ட் உத்தரவுப்படி விபத்து இழப்பீடு வழங்காததையடுத்து, அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, பல்லடம் - நெகமம் ரோட்டில், கடந்த, 2018ம் ஆண்டு, ஜன., 30ம் தேதி அரசு பஸ் மோதியதில், நெகமத்தை சேர்ந்த குணசீலன் என்பவர் இறந்தார்.
அதற்காக நஷ்டஈடு கோரி அவரது மனைவி ராஜேஸ்வரி, தாயார் கமலம்மாள் ஆகியோர் பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வக்கீல் பிரவின்குமார் வழக்கை நடத்தி வந்தார். கடந்த, 2023ம் ஆண்டு அக்., 20ம் தேதி பொள்ளாச்சி சார்பு நீதிபதி மோகனவள்ளி விசாரித்து மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 8.77 லட்சம் ரூபாய் வழங்க தீர்ப்பு வழங்கினார்.
மேலும், வட்டி, செலவு தொகையுடன் சேர்த்து நஷ்டஈடு வழங்க தமிழக போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர், இத்தொகையை வழங்காததால், மனுதாரர்கள் ஜப்தி மனுவை, சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், வட்டி மற்றும் செலவு தொகையுடன் சேர்த்து, 13 லட்சத்து, 33 ஆயிரத்து, 570.50 ரூபாய் போக்குவரத்து கழகம் செலுத்த வேண்டுமென, சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
போக்குவரத்து கழகம் இத்தொகையை செலுத்த தவறியதால், பொள்ளாச்சி சார்பு நீதிபதி மோகனவள்ளி, அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி, கோவை - திருச்சி செல்லும் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது, என வக்கீல் தெரிவித்தார்.