sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'கடகட...தட தட' சத்தத்துடன் அரசு பஸ்கள் நிலை பரிதாபம்

/

'கடகட...தட தட' சத்தத்துடன் அரசு பஸ்கள் நிலை பரிதாபம்

'கடகட...தட தட' சத்தத்துடன் அரசு பஸ்கள் நிலை பரிதாபம்

'கடகட...தட தட' சத்தத்துடன் அரசு பஸ்கள் நிலை பரிதாபம்

2


ADDED : பிப் 17, 2025 12:08 AM

Google News

ADDED : பிப் 17, 2025 12:08 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,; மோட்டார் வாகன சட்டத்தின்படி, 15 ஆண்டுகள் நிறைவடைந்த வாகனங்களின் பதிவானது ரத்து செய்யப்பட்டு, அதன் பிறகு அவை கழிவோடு சேர்க்கப்படுகிறது.

இதன் மூலமாக, மக்களுடைய பாதுகாப்பு உறுதி செய்வதுடன், தேவையற்ற விபத்துக்கள் நடப்பதையும் தடுக்க முடிகிறது.

தமிழகத்தில், 15 ஆண்டுகள் நிறைவடைந்த அரசு வாகனங்களை உடனடியாக ரத்து செய்தால் மக்கள் பாதிக்கப்படுவர் என்பதால், ஓராண்டு அவற்றை இயங்க காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

குறிப்பாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டால், பெரியளவில் பாதிப்பு ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 15 ஆண்டுகள் நிறைவடைந்த அரசு பஸ்கள் கழிவாக கருதப்பட்டு, அவற்றின் இயக்கம் நிறுத்தப்பட்டது.

இன்னும் பல டவுன்பஸ்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. பல பஸ்களில் பயணிகள் அமரும் இருக்கைகள் சேதமடைந்து உள்ளன.

முற்றிலும் பழுதடைந்த பல பஸ்களுக்கு பட்டி, டிங்கரிங் பார்க்கப்பட்டு இயக்கப்படுவதால், டிரைவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

அரசு போக்குவரத்துக்கழக அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கோவை மண்டலத்தில் கடந்தாண்டு, 15 ஆண்டுகளை நிறைவு செய்த, 44 அரசு பஸ்கள் கழிவுக்கு அனுப்பப்பட்டன. தற்போது, 15 ஆண்டுகள் நிறைவு செய்த எந்த ஒரு பஸ்ஸூம் இயக்கப்படவில்லை.

பஸ்களில் உள்ள பழுதுகள் சரிசெய்யப்படும். தற்போது புதிய பஸ்களை அரசு வழங்கி வருவதால், அதற்கு ஏற்றார் போல், பழைய பஸ்களை இயக்குகிறோம்.

'குறிப்பாக, 15 ஆண்டுகளை நிறைவு செய்யும் பஸ்கள், ஒவ்வொரு மாதமும் கழிவுக்கு அனுப்பப்படுகிறது' என்றார்.






      Dinamalar
      Follow us