sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அடிக்கடி பழுதாகி நிற்கும் அரசு பஸ்; பள்ளி மாணவர்கள் அவதி

/

 அடிக்கடி பழுதாகி நிற்கும் அரசு பஸ்; பள்ளி மாணவர்கள் அவதி

 அடிக்கடி பழுதாகி நிற்கும் அரசு பஸ்; பள்ளி மாணவர்கள் அவதி

 அடிக்கடி பழுதாகி நிற்கும் அரசு பஸ்; பள்ளி மாணவர்கள் அவதி


ADDED : டிச 05, 2025 08:38 AM

Google News

ADDED : டிச 05, 2025 08:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து அரசு பஸ் (வழித்தட எண் --- 13) ஜக்கார்பாளையத்துக்கு காலை, 9:35 மணிக்கும், மாலை,4:20 மணிக்கும் சென்று வருகின்றன. ஜக்கார்பாளையத்தில் உள்ள எம்.என்.எம். அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உதவியாக உள்ளது.

இந்நிலையில், பஸ் அடிக்கடி பழுதாகி நிற்பதால் மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

பொள்ளாச்சியில் இருந்து ஜக்கார்பாளையத்துக்கு இயக்கப்படும் பஸ், அடிக்கடி பழுதாகி பாதியிலேயே நிற்கிறது. இதனால், மாணவர்கள் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் அவ்வப்போது, பஸ் பழுதாகி நிற்கும் இடத்துக்கு சென்று மாற்று வாகனத்தில் மாணவர்களை அழைத்து வருவது தொடர்கதையாகியுள்ளது.

நேற்று முன்தினம் மாலை பஸ் பழுதாகி நின்றதால், மாணவர்களை ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் வாகனத்தில் அழைத்துச் சென்று வீடுகளில் விட்டனர். நேற்று காலையும் பஸ் பழுதாகி நின்றதால் மாணவர்கள் சிரமப்பட்டனர்.

அடிக்கடி, 'மக்கர்' ஆகி நிற்பது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து, உள்ள நிலையில் உள்ள பஸ் இயக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. மாணவர்கள் நலனுக்காக புதிய பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us