sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் தேவை! குறைதீர் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் மனு

/

அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் தேவை! குறைதீர் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் மனு

அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் தேவை! குறைதீர் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் மனு

அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் தேவை! குறைதீர் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் மனு


ADDED : அக் 07, 2025 12:48 AM

Google News

ADDED : அக் 07, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;மலேசியாவில் பணியாற்றும் கணவரை மீட்டுதரக்கோரி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது.

பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஐயப்பன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில், கடந்த, 1ம் தேதி வயிற்றுவலி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளுடன், 10க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஓ.பி. சீட்டு வழங்கியிருந்த நிலையில், அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தனர்.

இது குறித்து விசாரித்த போது, அவசர சிகிச்சை பிரிவில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளதாகவும், மருத்துவமனையில் வேறு எந்த பகுதியில் அவசர உதவி என்றாலும் அவரே செல்ல வேண்டும். குற்றவாளிகளை அழைத்து வரும் போது, அவர்களை பார்வையிட்டு மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும் என தெரிந்தது.

பயிற்சி மருத்துவ மாணவர்கள், பணி மருத்துவர்கள் மாலை வரை மட்டுமே பணியில் உள்ளனர். எனவே, கூடுதல் டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

* எஸ்.புரவிபாளையம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி அருகே எஸ்.புரவிபாளையம் அஞ்சல் கிளைக்கு உட்பட்ட கோவிந்தனுார், ஜமீன் புரவிபாளையம், பூசநாயக்கன் தளி கிராமங்களில், 4,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் எஸ்.புரவிபாளையம் அஞ்சல் கிளையில், வரவு, செலவு செய்து வருகின்றனர். இந்த கிளையில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிபவர், மக்களின் பணத்தை பெற்று, சேமிப்பு, தொடர் வைப்பு தொகை, இன்சூரன்ஸ்க்கு வரவு வைக்காமல் காலதாமதம் செய்து, லட்ச கணக்கில் கையாடல் செய்து தலைமறைவாகியுள்ளார். இது குறித்து விசாரணை செய்து போஸ்ட் மாஸ்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வாயிலாக செலுத்திய பணத்தை உரிய கணக்கில் வரவு வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

* ராமபட்டிணத்தை சேர்ந்த பவித்ரா மற்றும் குடும்பத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது கணவர் ராஜ்குமார், கடந்தாண்டு செப். மாதம் மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார்.நிறுவனத்தில் இருந்து நாடு திரும்ப திட்டமிட்ட போது, பாஸ்போட்டை பறித்து வைத்துக்கொண்டு, ஒரு நாளைக்கு, 18 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய சொல்லி சரியான உணவு, இருப்பிடம் தராமல் கொடுமைப்படுத்துகின்றனர்.

அவரை தற்கொலைக்கு துாண்டுவதுடன், கடுமையான சித்ரவதைக்கு ஆளாக்குகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுத்து கணவரை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us