sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஜே.இ.இ., முதன்மை தேர்வில் அரசு பள்ளி மாணவர் வெற்றி

/

ஜே.இ.இ., முதன்மை தேர்வில் அரசு பள்ளி மாணவர் வெற்றி

ஜே.இ.இ., முதன்மை தேர்வில் அரசு பள்ளி மாணவர் வெற்றி

ஜே.இ.இ., முதன்மை தேர்வில் அரசு பள்ளி மாணவர் வெற்றி


ADDED : ஏப் 21, 2025 06:44 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : காரமடை அருகே வெள்ளியங்காடு அரசு பள்ளி மாணவர், ஜே.இ.இ., முதன்மை தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில், இளநிலை படிப்புகளில் சேர ஜே.இ.இ., முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரு கட்டங்களாக நுழைவு தேர்வுகளை, தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது.

2025--2026 ஆண்டிற்கான முதன்மை தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவு வெளியிடப்பட்டது. இதில் கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சுமித் என்ற 12ம் வகுப்பு மாணவர் தேர்வு எழுதி வெற்றி பெற்று, வரும் மே 18 ம் தேதி நடைபெறவுள்ள பிரதான தேர்விற்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் ஐ.ஐ.டி.,போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். வெற்றி பெற்ற மாணவரை பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடிஸ் குலசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ராம்தாஸ் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேபி ஆகியோர் பாராட்டினார்கள்.----






      Dinamalar
      Follow us