sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மன்ற போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

/

 மன்ற போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

 மன்ற போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

 மன்ற போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்


ADDED : நவ 20, 2025 02:12 AM

Google News

ADDED : நவ 20, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மன்றப் போட்டிகளில் வெள்ளியங்காடு அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மன்றப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் மாவட்ட அளவிலான போட்டிகள் கோவையில் நடைபெற்றது. இதில் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 9ம் வகுப்பு பிரிவில், தமிழ் பேச்சுப்போட்டியில், அன்பு என்ற மாணவன் முதலிடமும், ஆங்கிலப் பேச்சுப்போட்டியில் ஜேடன் மேஷாக் என்ற மாணவன் முதலிடமும், 6 மற் றும் 7ம் வகுப்பு பிரிவில் ஆங்கிலம் கவிதை எழுதும் போட்டியில் மாணவி கேயிட்லின் முதலிடமும் பெற்று, மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனர். பின், 6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் கோவை சர்வஜனா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் ஆங்கில கவிதை எழுதுவதற்கான போட்டியில், மாணவி கேயிட்லின், மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பலர் பாராட்டினர்.---






      Dinamalar
      Follow us