sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கேரம் போட்டியில் 'வச்ச குறி தப்பாது'; அசத்திய அரசு பள்ளி மாணவ, மாணவியர்

/

கேரம் போட்டியில் 'வச்ச குறி தப்பாது'; அசத்திய அரசு பள்ளி மாணவ, மாணவியர்

கேரம் போட்டியில் 'வச்ச குறி தப்பாது'; அசத்திய அரசு பள்ளி மாணவ, மாணவியர்

கேரம் போட்டியில் 'வச்ச குறி தப்பாது'; அசத்திய அரசு பள்ளி மாணவ, மாணவியர்


ADDED : ஆக 31, 2025 11:42 PM

Google News

ADDED : ஆக 31, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மாவட்ட அளவிலான 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள் ஆக. 26ம் தேதி முதல் நடந்துவருகிறது. பள்ளி, கல்லுாரி, மாணவ, மாணவியருக்கு எஸ்.என்.ஆர். கல்லுாரியில் மூன்று நாட்கள், கேரம் போட்டிகள் நடந்தன.

பள்ளி மாணவர்களுக்கான இரட்டையர் பிரிவில், 88 அணிகள் பங்கேற்றன. நிறைவில், இவாஞ்சலின் மெட்ரிக் பள்ளி, வெள்ளலுார் அரசுப் பள்ளி, பீளமேடு அரசுப் பள்ளி ஆகியன முதல் மூன்று இடங்களை பிடித்தன.

மாணவர்களுக்கான (இரட்டையர்) போட்டியில், 29 அணிகள் விளையாடின. இதில், காளப்பட்டி அரசுப் பள்ளி, எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் மாநகராட்சி பள்ளி, சி.சி.எம்.ஏ. பள்ளி ஆகியன முதல் மூன்று இடங்களை வென்றன.

மாணவர்களுக்கான ஒற் றையர் பிரிவில், ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர் ஹரிஹரன், பீளமேடு மாநகராட்சி பள்ளி மாணவர் பரணிதரன், எஸ்.எஸ்.குளம் அரசுப் பள்ளி மாணவர் விஷ்ணுவர்தன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை தட்டினர்.

மாணவியர்(ஒற்றையர்) பிரிவில், சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி மாணவி பிரீத்தி, பி.எஸ்.ஜி. சர்வஜன பள்ளி மாணவி சோபனா, பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பள்ளி ஹர்திகா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.






      Dinamalar
      Follow us