/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : செப் 30, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பட் ட மளிப்பு விழா நடந்தது.
பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு பட்ட மளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார். கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் செண்பகலட்சுமி, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
கடந்த, 2020 - 23, 2021 - 24ம் கல்வியாண்டில் ஐந்து துறைகளில், இளங்கலை பட்டப்படிப்பு பயின்ற, 463 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பெற்றோர், கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.