ADDED : பிப் 12, 2025 11:44 PM
அன்னுார்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், கடந்த 2023 ஏப். 1 முதல், 2024 மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெற்ற பணிகள் குறித்த சமூக தணிக்கை கடந்த 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில் செய்யப்பட்ட பணிகள் அளவீடு செய்யப்பட்டன. வேலை அட்டைகள் பரிசோதிக்கப்பட்டன. இன்று சமூக தணிக்கை அறிக்கை தயாரிக்கப்படுகிறது. நாளை (14ம் தேதி) காலை 11:00 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் வட்டார வள அலுவலர் கனகராஜ் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கிறார்.
நாரணாபுரம் ஊராட்சி மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதேபோல் காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், காளம்பாளையம், மருதூர், நெல்லித்துறை ஊராட்சிகளிலும் நாளை (14ஆம் தேதி) காலை 11:00 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.