sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தாத்தா அறிவித்த பாலத்தை திறந்து வைத்தார் பேரன்

/

 தாத்தா அறிவித்த பாலத்தை திறந்து வைத்தார் பேரன்

 தாத்தா அறிவித்த பாலத்தை திறந்து வைத்தார் பேரன்

 தாத்தா அறிவித்த பாலத்தை திறந்து வைத்தார் பேரன்

2


ADDED : டிச 31, 2025 05:06 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:06 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஒண்டிப்புதுாரில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ். காலனிக்கு செல்ல, ரயில்வே மேம்பாலம் கட்டும் திட்டத்தை, 2010ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கிடப்பில் போடப்பட்டது. இரு ஆண்டுகள் கழித்து, கட்டுமான பணி, மாநில நெடுஞ்சாலைத்துறையால் துவக்கப்பட்டது.

அணுகு சாலைக்கு போதிய இடம் ஒதுக்காமல், 30 அடி அகலத்துக்கு பாலம் கட்ட ஆரம்பித்ததால், அப்பகுதி மக்கள், வழக்கு போட்டனர்.

வழக்கு ஆண்டுக்கணக்கில் இழுத்ததால், தீர்வு காண முடியாமல் நெடுஞ்சாலைத்துறையினர் திணறினர். 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு ரூ.29.37 கோடி ஒதுக்கப்பட்டது. மொத்தம் ரூ.55.40 கோடி செலவழித்து, மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

இப்பாலத்தை, துணை முதல்வர் உதயநிதி, ஆர்.எஸ்.புரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 42 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்.






      Dinamalar
      Follow us