sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்த 'பச்சைக்கொடி'

/

சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்த 'பச்சைக்கொடி'

சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்த 'பச்சைக்கொடி'

சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்த 'பச்சைக்கொடி'


ADDED : மே 24, 2025 11:41 PM

Google News

ADDED : மே 24, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: கோவை மாவட்ட விவசாயிகள் மண்ணில் குறைவாக உப்பு தன்மையை ஏற்படுத்தும், சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தலாம் என, வேளாண் துறை அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் காரிப் பருவ பயிர் சாகுபடிக்காக யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்டவை, 11ஆயிரத்து, 766 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு சந்தையில் டி.ஏ.பி., விலை அதிகமாக உள்ளதால், டி.ஏ.பி., உரத்துக்கு மாற்றாக கால்சியம், பாஸ்பரஸ், சல்பர் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கிய சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம்.

எண்ணெய் வித்து பயிர்களில், டி.ஏ.பி., உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தும் போது, மகசூல் அதிகரித்து எண்ணெய் அளவும் அதிகரிக்கிறது. டி.ஏ.பி., உரமானது மண்ணில் உப்பு நிலையை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அதேசமயம் சூப்பர் பாஸ்பேட் உரம், டி.ஏ.பி., உரத்தை விட குறைவாக உப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது. எனவே, டி.ஏ.பி.,க்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம் என, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us