sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நான்கு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

/

நான்கு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

நான்கு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

நான்கு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு


ADDED : ஆக 03, 2025 09:36 PM

Google News

ADDED : ஆக 03, 2025 09:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கடந்த ஜூலை மாதத்தில், கோவை, தஞ்சாவூர், நாகை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் சார்பில், ஒவ்வொரு மாதமும், நிலத்தடி நீர்மட்டம் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படுகிறது. சென்னை தவிர, மற்ற 37 மாவட்டங்களில், கண்காணிப்பு கிணறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த ஜூன் மாதத்தில், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், நிலத்தடி நீர் மட்டம் சற்று உயர்ந்திருந்தது.

ஆனால், ஜூலை மாதத்தில், கோவை, தஞ்சாவூர், நாகை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது.

ஜூன் முதல் துவங்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில், நடப்பாண்டு முன்கூட்டியே, மே இறுதியில் மழை துவங்கியது. பரவலாக பெய்த மழையால், ஜூன் மாதத்தில், 19 மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us