/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று நடக்கிறது குரூப் 2 தேர்வு
/
இன்று நடக்கிறது குரூப் 2 தேர்வு
ADDED : பிப் 22, 2026 05:38 AM
கோவை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.,) சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (குரூப் 2) இன்று நடக்கிறது.
103 பேர் பங்கேற்க உள்ளனர். முதற்கட்ட தேர்வு முடிந்த நிலையில், பிரதான தேர்வு இன்று நடக்கிறது. பெரியகடைவீதி செயின்ட் மைக்கேல்ஸ் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடக்க உள்ளது. தேர்வுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், கலெக்ட்ரேட் ஆகிய இடங்களில் சிறப்பு உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விவரங்களுக்கு: கலெக்ட்ரேட் உதவி மைய எண். 0422 - 2301114, 2301115, 2301116, மாநகர போலீஸ் உதவி மைய எண். 0422 - 2300 970, 94981 81213, மாவட்ட நகர பஸ் மற்றும் ஊரக நிலைய உதவி மையம் எண் செந்தில்குமார் 94425 01929, ஏசுதாஸ், 88257 72866.

