ADDED : நவ 20, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர் உட்பட இருவர் மீது, குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நீலிக்கோணாம்பாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் விக்னேஷ், 22. இவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல், கோவை வடவள்ளியை சேர்ந்தவர் நிரஞ்சன், 25. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதற்காக வடவள்ளி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் இருவர் மீதும், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

