/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்சோ கைதி மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
/
போக்சோ கைதி மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 21, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அய்யாதுரை, 43; சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், போலீசார் விசாரித்தனர்.
இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அய்யாதுரையை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, பரிந்துரை செய்யப்பட்டது. இதை ஏற்று அய்யாதுரையை, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.