/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
/
ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
ADDED : நவ 11, 2024 06:57 AM
பொள்ளாச்சி : கோவை அருகே, வாளையார் சோதனைச் சாவடி வழியாக, கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திய நபர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.
தற்போது ரேஷன் அரிசி கடத்தல் ஆங்காங்கே நடந்து வருகிறது. அவர்களை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் அவ்வப்போது பிடித்து கைது செய்து வருகின்றனர்.
அவர்களிடமிருந்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்படுகிறது. இதைத்தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம், 29ம் தேதி, கோவை அருகே வாளையார் சோதனைச்சாவடியில், பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சரக்கு வாகனத்தில், 4,700 கிலோ, ரேஷன் அரிசி கடத்திய, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், 35, என்பவரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர், கடந்த 2023ல், ஜூலை 10ம் தேதி, திருப்பூர் - பல்லடம் ரோடு டி.கே.டி., மில் சந்திப்பு அருகே வேன் வாயிலாக, 1,850 கிலோ ரேஷன் அரிசியை, கேரளாவுக்கு கடத்திய வழக்கிலும் சம்பந்தப்பட்டவர் என தெரியவந்தது.
அதன்பேரில், கார்த்திகேயனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் பரிந்துரைத்தார்.
மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், குண்டர் தடுப்புச்சட்டத்தில் அவரை கைது செய்ய உத்தரவிட்டார். ஏற்கனவே, கைதாகி கோவை மத்திய சிறையில் உள்ளவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகல், சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.