sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வால்பாறையில் கோடை விழா கலெக்டர் அறிவிப்பால் மகிழ்ச்சி

/

வால்பாறையில் கோடை விழா கலெக்டர் அறிவிப்பால் மகிழ்ச்சி

வால்பாறையில் கோடை விழா கலெக்டர் அறிவிப்பால் மகிழ்ச்சி

வால்பாறையில் கோடை விழா கலெக்டர் அறிவிப்பால் மகிழ்ச்சி


ADDED : மே 15, 2025 11:54 PM

Google News

ADDED : மே 15, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறையில் இம்மாத இறுதியில், கோடை விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வால்பாறை நகராட்சி சமுதாய நலக்கூடத்தில், மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் வரவேற்றார்.

முகாமில், 171 பயனாளிகளுக்கு, 3.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, மாவட்ட கலெக்டர் பேசியதாவது:

மக்கள் தொடர்பு முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது, உடனடியாக தீர்வு காணப்படும். பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையில், வனப்பகுதியில் கிடைக்கும் விவசாய பொருட்களை மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வாயிலாக, விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தன்னார்வலர்கள் வாயிலாக அடிப்படை வசதிகள், சுகாதாரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சில திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் வால்பாறை மலைப்பகுதியில் அதிகளவில் தேர்ச்சி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ஊட்டி, கொடைக்கானலை போன்று கோவை மாவட்டம் வால்பாறையிலும் மாத இறுதியில் கோடை விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு, பேசினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கீதா, தாட்கோ மேலாளர் மகேஸ்வரி, நகராட்சி கமிஷனர் ரகுராமன் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us