sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மிலாது விழாவில் நல்லிணக்கம் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி

/

மிலாது விழாவில் நல்லிணக்கம் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி

மிலாது விழாவில் நல்லிணக்கம் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி

மிலாது விழாவில் நல்லிணக்கம் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி


ADDED : செப் 05, 2025 10:15 PM

Google News

ADDED : செப் 05, 2025 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:

இறைதுாதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை, மிலாது நபி திருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். மிலாது நபி நாளான நேற்று, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது.

கோவை கோட்டைமேட்டில் நடந்த ஊர்வலத்தில், சமூக ஒற்றுமையை காப்போம்; சகோதரத்துவத்தை போற்றுவோம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சிறுவர், சிறுமியர் ஏந்திச் சென்றனர். அவர்களுக்கு மாற்று மதத்தைச் சேர்ந்த பலரும் பிஸ்கட், குளிர்பானங்கள் இனிப்பு வழங்கி, மத நல்லிணக்கத்தை போற்றினர்.

உக்கடம் மவுலான முஹம்மது அலி மார்க்கெட் வளாகத்தில் நடந்த, 82ம் ஆண்டு மிலாது விழாவில் திருமண நிதி, தையல் இயந்திரம், மருத்துவ நிதி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை, விழாவில் பங்கேற்ற நலிந்தோருக்கு, கோயமுத்துார் டவுன் ஹாஜி அப்துல் ரஹீம் இம்தாதி பாகவி வழங்கினார். மார்க்கெட் தலைவர் நுார்முகமது தலைமை வகித்தார். 86வது வார்டு கவுன்சிலர் அஹமது கபீர் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.






      Dinamalar
      Follow us