sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கனமழையால் மண் சரிவு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

/

கனமழையால் மண் சரிவு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனமழையால் மண் சரிவு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனமழையால் மண் சரிவு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ADDED : ஜூன் 25, 2025 09:52 PM

Google News

ADDED : ஜூன் 25, 2025 09:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறையில் கடந்த ஒரு மாதமாக, தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்கிறது. கடந்த, 20 நாட்களாக கனமழை பெய்வதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருவதோடு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

காற்றுடன் கனமழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது.

சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று காலை, 150.10 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,812 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 456 கனஅடி வீதம் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடபட்டுள்ளது.

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு: சோலையாறு - 70, பரம்பிக்குளம் - 51, ஆழியாறு - 5, வால்பாறை - 47, மேல்நீராறு - 86, கீழ்நீராறு - 75, காடம்பாறை - 15, மேல்ஆழியாறு - 4, சர்க்கார்பதி - 12, வேட்டைக்காரன்புதுார் - 22, மணக்கடவு - 24, துாணக்கடவு - 25, பெருவாரிப்பள்ளம் - 30, நவமலை - 3, பொள்ளாச்சி - 23 என்ற அளவில் மழை பெய்தது.






      Dinamalar
      Follow us