sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கனமழை

/

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கனமழை

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கனமழை

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கனமழை


ADDED : ஜன 16, 2025 05:57 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் குளம், குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்தது.

வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெரியநாயக்கன்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கன மழை பெய்தது. இதனால் மலையோரங்களில் உள்ள சிற்றோடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி, பிரஸ்காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருகிய மழை நீர், சாக்கடையில் வழிந்து ஓடி சின்னமத்தம்பாளையத்தில் உள்ள தடுப்பணையை வந்து அடைந்தது.

தடுப்பணியில் ஏற்கனவே கழிவு நீர் கலந்து இருந்ததால், தண்ணீரில் நுரை பெருகி, அப்பகுதியில் முழுவதும் பறந்து ஓடியது.

இது குறித்து வேளாண் துறையினர் கூறுகையில்,' தற்போது பெய்த மழை, காய்கறி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பலன் அளிக்கும். மேலும், தென்னை, வாழை உள்ளிட்ட மர பயிர்களுக்கும் உதவியாக இருக்கும்' என்றனர்.






      Dinamalar
      Follow us