/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணியில் சாரல் மழை ; 41.33 அடியாக நீர் மட்டம்
/
சிறுவாணியில் சாரல் மழை ; 41.33 அடியாக நீர் மட்டம்
ADDED : ஜூலை 21, 2025 11:02 PM
கோவை; கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் தொடர் மழை பெய்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருந்தது.
கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணை மற்றும் அடிவாரத்தில் தலா, 2 மி.மீ., மழை பதிவாகியது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி என்ற நிலையில் தற்போது, 41.33 அடியாக நீர் மட்டம் உள்ளது.
அணையில் நீர்க்கசிவு இருப்பதால், பாதுகாப்பு கருதி, 44.61 அடி வரை மட்டுமே தண்ணீரை தேக்க கேரள அரசு அனுமதித்துள்ளது. குடிநீர் தேவைக்காக, 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

