sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இடியுடன் பெய்த கனமழை

/

இடியுடன் பெய்த கனமழை

இடியுடன் பெய்த கனமழை

இடியுடன் பெய்த கனமழை


ADDED : நவ 18, 2024 10:33 PM

Google News

ADDED : நவ 18, 2024 10:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த, 10 நாட்களாக சாரல்மழை மட்டுமே பெய்து வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு இடியுடன் கனமழை பெய்தது.

இதனால், வால்பாறை முழுவதும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையினால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பி.ஏ.பி., அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

கனமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 150.15 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 170 கனஅடி நீர் வரத்தாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 349 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது.

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):

சோலையாறு - 21, வால்பாறை - 3, பரம்பிக்குளம் - 2, ஆழியாறு - 10, மேல்நீராறு - 19, கீழ்நீராறு - 14, காடம்பாறை - 54, மேல்ஆழியாறு - 37, பெருவாரிப்பள்ளம் - 3, நவமலை - 14, பொள்ளாச்சி - 3 என்ற அளவில் மழை பெய்தது.






      Dinamalar
      Follow us