sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வெள்ளை ஈ கட்டுப்படுத்த உயரழுத்த மருந்து தெளிப்பான்

/

வெள்ளை ஈ கட்டுப்படுத்த உயரழுத்த மருந்து தெளிப்பான்

வெள்ளை ஈ கட்டுப்படுத்த உயரழுத்த மருந்து தெளிப்பான்

வெள்ளை ஈ கட்டுப்படுத்த உயரழுத்த மருந்து தெளிப்பான்


ADDED : ஜூன் 20, 2025 02:20 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : தென்னை மரங்களில் வெள்ளை ஈ பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த, தேங்காய் பறிக்கும் இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள உயர் அழுத்த பூச்சி மருந்து தெளிப்பான் கருவியை, வேளாண் பொறியியல் துறை குறைந்த வாடகைக்கு விடுகிறது.

வேளாண் பொறியியல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்னை மரங்களில் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த, வேளாண் பொறியியல் துறையில் உள்ள, உயர் அழுத்த தெளிப்பானைப் பயன்படுத்தலாம்.

தமிழ்நாடு வேளாண் பல்கலையால், பரிந்துரைக்கப்பட்ட ஒரு லிட்டருக்கு 5 மில்லி வேப்ப எண்ணெய், 5 கிராம் காதி சோப், 1 மில்லி ஒட்டும் திரவம் கலந்த தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தென்னை மரங்களைக் காப்பாற்றலாம்.

ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக, 500 லிட்டர் தண்ணீர் அல்லது மருந்துக் கலவையை 35 முதல் 45 தென்னை மரங்களுக்கு தென்னங் கீற்றுகளின் அடிப்பரப்பில் பீய்ச்சி அடிக்கலாம்.

கோவை, பொள்ளாச்சி, உடுமலை உட்பட தமிழகத்தில் 20 இடங்களில், வேளாண் பொறியியல் துறையிடம் இந்த இயந்திரம் உள்ளது.

இ--வாடகை செயலி வாயிலாக, விவசாயிகள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு மணி நேரத்துக்கு ரூ. 450 வாடகை செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, அருகிலுள்ள வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us