/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர்வான எண்ணங்களால் உயர்ந்த நிலையை அடையலாம்!
/
உயர்வான எண்ணங்களால் உயர்ந்த நிலையை அடையலாம்!
ADDED : ஜன 30, 2025 11:15 PM

வால்பாறை: வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நாட்டுநலப் பணி திட்ட நிறைவு விழா, நகராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் பெரியசாமி ஆண்டறிக்கையை சர்ப்பித்தார். திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.
விழாவில், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி பேசியதாவது: வால்பாறையில், சமீப காலமாக போதை பழக்கம் அதிக அளவில் உள்ளது. அதை கட்டுப்படுத்த போலீசாரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள், தீய பழக்க வழக்கத்துக்கு ஆளாகக்கூடாது. கற்கும் கல்வி தான் கடைசி வரை உங்களுடன் இருக்கும்.
மாணவர்களின் உயர்வான எண்ணங்கள் தான், வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். படிக்கும் வயதில் மனதில் தீய எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல், நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
நகராட்சி கமிஷனர் ரகுராமன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரூபா நன்றி கூறினார்.

