sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை

/

'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை

'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை

'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை


ADDED : ஜூலை 21, 2025 12:15 PM

Google News

ADDED : ஜூலை 21, 2025 12:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'தமிழகத்தில் போலீஸ் துறையில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம் நிகழ்கிறது,' என, ஹிந்து முன்னணி கவலை தெரிவித்துள்ளது.இதுகுறித்த, அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:

தி.மு.க., ஆட்சியில், அரசு துறைகளில் நேர்மையான அதிகாரிகள் குரல்வளை நெரிக்கப்படுகிறது. அவர்களை பணி செய்ய விடாமல் உயர் அதிகாரிகள் தடுத்து மன உளைச்சலை ஏற்படுத்துவதும் நடக்கிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ள போலீஸ் அதிகாரிகள் தங்கள் பொறுப்பை மறந்து அக்கட்சியின் பொறுப்பாளர்கள் போல் செயல்படுகின்றனர்.

மயிலாடுதுறை டி.எஸ்.பி., சுந்தரேசன் கூறிய தகவல்கள் அதிர்ச்சியையும், உயர் அதிகாரிகள் முகத்திரையை கிழிப்பதாகவும் உள்ளது. அவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட வைக்க இரு அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.நேர்மையான அதிகாரிகள் கட்டுப்படாவிட்டால் பணியிட மாற்றம் செய்கின்றனர். வேலியே பயிரை மேய்வதாக இது போன்ற சம்பவங்கள் உள்ளன.போதை பொருள் கடத்தி சிறையில் உள்ள வெளிநாட்டினர் சிறை ஊழியர்களிடம் தகராறு செய்த போது, அவர்களிடம் பிரச்னை வேண்டாம் என்று குற்றவாளிகளுக்கு ஆதரவாக உயர் அதிகாரி யெல்படுகிறார். போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் போலீஸ் உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என செய்திகள் வருகிறது.அதேபோல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் நபர்களும், சிறைத்துறையினரையும், போலீசாரையும் மிரட்டி தாக்குகின்றனர். இதையும் கண்டு கொள்ள வேண்டாம் என்ற உத்தரவு வருகிறது.

போலீஸ் நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஜனநாயக போராட்டம் நடத்தினால், பொய் வழக்குகள் பாய்கிறது; பக்தி விழாக்களுக்கு கூட எப்படி தடை போடலாம் என இவர்கள் யோசிக்கின்றனர். இந்த ஆட்சியின் நான்காண்டுகளில், தமிழகத்தில் கொலை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. லாக்கப் மரணங்களுக்கு விடை தெரியாமல் போகிறது.சட்ட விரோத மது விற்பனை, போதை பொருள் கலாசாரம், கனிம வள கடத்தல் என நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. புகார் அளித்தால் அவருக்கு மிரட்டல் வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர் கெட இரு உயர் அதிகாரிகள் தான் காரணம் என்ற சந்தேகம் வலுக்கிறது. நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவது காட்டுமிராண்டித்தனமானது. பாரபட்சமின்றி, நேர்மையாக, சுதந்திரமாக, சட்டப்படி போலீசார் பணியாற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us