sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புனித ஜெபமாலை தேர் திருவிழா; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

/

புனித ஜெபமாலை தேர் திருவிழா; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

புனித ஜெபமாலை தேர் திருவிழா; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

புனித ஜெபமாலை தேர் திருவிழா; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


ADDED : அக் 07, 2025 11:06 PM

Google News

ADDED : அக் 07, 2025 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

கருமத்தம்பட்டியில் உள்ள புனித ஜெபமாலை பசிலிக்கா பழமையானது. இங்கு, 385வது ஆண்டு தேர்திருவிழா நடந்தது. கடந்த, 26 ம்தேதி, காலை கொடியேற்றத்துடன் தேர் திருவிழா துவங்கியது. கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் பங்கேற்று மறையுரை ஆற்றினார். தினமும் திருப்பலி மற்றும் மறையுரைகள் நடந்தன. கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் கூட்டு பாடல்பலி நடந்தது. இருபால் துறவியருக்காக கூட்டு பாடல் பலி, தேர் பவனி ஆயர் தலைமையில் நடந்தது.

புனித ஜெபமாலை அன்னையின் அலங்கார திருத்தேர் பவனி நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us