/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியாக இருக்கும் முதியோர் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
/
தனியாக இருக்கும் முதியோர் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
தனியாக இருக்கும் முதியோர் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
தனியாக இருக்கும் முதியோர் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ADDED : ஜூலை 05, 2025 11:59 PM

இ ன்று முதியோர் வீட்டில் தனியாக இருப்பது சர்வசாதாரணமாகி விட்டது. இதுபோன்ற சமயங்களில், மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் ஸ்ட்ரோக் தாக்கலாம். அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்?
கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலத்திடம் கேட்டோம்.
n மொபைல் போன் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். அவசர உதவி எண்களை பதிவு செய்து, அதை பயன்படுத்த தெரிந்து இருக்க வேண்டும்.
n உங்கள் பிரச்னை, டாக்டர் பெயர், தொடர்பு எண் போன்றவற்றை எழுதி தெரியும் படி சட்டைப்பையில் வைத்திருக்க வேண்டும்.
n ஸ்மார்ட் வாட்ச், ஆக்சிஜன் அளவு தெரிவிக்கும் சாதனங்களை பயன்படுத்த தெரிந்து இருப்பது கூடுதல் சிறப்பு.
n மருந்துகளை எப்போதும் ஒரே இடத்தில், சரியாக ஒழுங்குபடுத்தி வைக்க பழகிக்கொள்ளுங்கள். காலை, மாலை, இரவு, அவசர நேரங்களில் என பிரித்து ,பார்ப்பவர்களுக்கு தெரியும்படி வையுங்கள்.
n வீடுகளின் அருகில் உள்ள நபர்களுடன், பேசி பழக வேண்டியது அவசியம். ஒரு சிலருடன் தினந்தோறும் பேசும் பழக்கம் ஏற்படுத்தி விடுங்கள். உங்களுக்கு முடியாமல் போகும் நேரம் உதவிக்கு ஓடி வருவார்கள்.
n மன அழுத்தம் தவிர்க்க யோகா, ஆன்மிக பயணம், சுற்றுலா, நண்பர்களுடன் அரட்டை என்று உங்களை, பிசியாக வைத்துக்கொள்ளுங்கள்.
n முடியாத நிலையில் பெரியோர் உள்ள வீடுகளில், கீழே விழுந்தால் உதவிக்கு பெல், சென்சார் செட்அப் செய்துவைக்கலாம்.
n மாரடைப்புக்கு முதல் உதவியாக இருக்கும் ( டிஸ்பிரின் 350 மி.கி-1, அடார்வாஸ்டாடின் 80 மி.கி -1, குலோபிடாப் 150 மி.கி., -2 ) லோடிங் டோஸ் மருந்துகளை இதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள்,எப்போதும் வைத்திருக்க வேண்டும். இவை, ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து, மாரடைப்பின் தீவிரத்தன்மையை குறைக்கும். உங்கள் டாக்டரிடம் இதுகுறித்து முன்கூட்டியே தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.