sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீடுகளுக்கு ரேஷன் வழங்குவது எப்படி? ஊழியர்களுக்கு அறிவுரை

/

வீடுகளுக்கு ரேஷன் வழங்குவது எப்படி? ஊழியர்களுக்கு அறிவுரை

வீடுகளுக்கு ரேஷன் வழங்குவது எப்படி? ஊழியர்களுக்கு அறிவுரை

வீடுகளுக்கு ரேஷன் வழங்குவது எப்படி? ஊழியர்களுக்கு அறிவுரை


ADDED : ஜூலை 30, 2025 08:56 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 08:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில் மாற்றுத் திறனாளிகள், 70 வயதுக்கு மேற்பட்டோர் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்குவது எப்படி என அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.

வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு வந்து பொருட்கள் வாங்கிச் செல்ல ஏற்படும் சிரமத்தை போக்க, வீடு தேடிச் சென்று வினியோகிக்கும் திட்டம், ஆக., 15ல் துவக்கப்படுகிறது. அதற்கான வழிமுறைகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அவை:

 மாற்றுத்திறனாளிகள் மற்றும், 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே வீடு தேடிச் சென்று பொருட்கள் வழங்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டோர், குடும்ப உறுப்பினர் இருந்தால் இத்திட்டம் பொருந்தாது.

 நகர்ப்புறத்தில், 70, கிராமப்புறத்தில், 60, மலைப்பகுதியில், 50 கார்டுதாரர்களுக்கு ஒரு நாளில் வழங்கும் வகையில் 'கிளஸ்டர்' உருவாக்க வேண்டும்.

 முதல் நாளில், 70/ 60 கார்டுதாரருக்கு வழங்க வேண்டும். இரண்டாவது நாளில், 70/ 60 கார்டுதாரர்கள் இல்லாவிட்டால், அருகில் உள்ள கடைக்குரிய கார்டுதாரர்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

 பொருட்களை எடுத்துச் செல்வதற்கான வாகனங்களை, தார் பாய் வசதியுடன் தயார்படுத்திக் கொள்ளவும். மழையில் பொருட்கள் நனைந்து விடக்கூடாது.

 வாகனத்தில் பொருட்களை ஏற்றி, இறக்குவதற்கு லோடுமேன் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

 பயனாளிகள் பட்டியலில் இறந்தவர்கள், முகவரி மாறிச் சென்றவர்கள் இருக்கிறார்களா என, முன்னரே சரிபார்த்து, அதற்கேற்ப 'ரூட் மேப்' தயாரிக்க வேண்டும்.

 திட்டம் செயல்படுத்தும் நாளன்று, எவ்வித தடங்கல் மற்றும் விடுதல், புகாருக்கு இடமளிக்காத வகையில் விற்பனை செய்ய வேண்டும்.

 விற்பனை முனைய இயந்திரம், தராசு மற்றும் பேட்டரி ஆகியவை நாள் முழுவதும் 'பேக்கப்' இருக்கும் வகையில், தயாராக வைத்திருக்க வேண்டும்.

 தேவையான டேபிள், சேர் எடுத்துச் செல்ல வேண்டும். கார்டு தாரர்களை இருக்கையில் அமர வைத்து, 'பயோமெட்ரிக்' முறையில் மட்டுமே விற்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

'மொபைல் யூனிட்டே சிறந்தது'

ரேஷன் ஊழியர்கள் கூறுகையில், 'ரேஷன் கடை ஊழியர்கள், இரண்டு நாட்கள் கடையை அடைத்து விட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். வாகனம் ஏற்பாடு செய்து பொருட்களை ஏற்றி, சேர் எடுத்துக் கொண்டு செல்வது தேவையற்ற சிரமத்தையே ஏற்படுத்தும். மலை வாழ் மக்களுக்கு 'மொபைல் யூனிட்' உருவாக்கியதை போல், இத்திட்டத்துக்கும் கார்டு எண்ணிக்கைக்கேற்ப 'மொபைல் யூனிட்' ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு கடைக்கும் வாகனம் ஏற்பாடு, லோடு மேன், சேர், தார்பாய் உள்ளிட்ட செலவினங்களை கடைக்காரர்கள் செலவிடுவது தேவையற்றது. மொபைல் யூனிட்டில் வீதி வீதியாகச் சென்று எளிதாக வினியோகிக்கலாம்' என்றனர்.








      Dinamalar
      Follow us