/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஷம் குடித்த தம்பதி; கணவர் உயிரிழப்பு
/
விஷம் குடித்த தம்பதி; கணவர் உயிரிழப்பு
ADDED : பிப் 17, 2025 11:48 PM
கோவை; கோவை குறிச்சி பிரிவு, பிலால் காலனியை சேர்ந்தவர் அசைன் கான், 41; லேத் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவரது மனைவி ஷகீலா பேகம், 39. இவர்களின் மகளுக்கு, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
மகளின் திருமணத்துக்காக, அசைன்கான் கடன் வாங்கியிருந்தார். அதற்கான தவணையை செலுத்தி வந்தார். அவருக்கு கடந்த சில மாதங்களாக சரியான வேலை இல்லை. இதனால் குடும்ப செலவை சமாளிக்க முடியவில்லை. கடனையும் அடைக்க முடியவில்லை.
இதனால், தம்பதியர் கடந்த சில தினங்களாக, கடும் மன உளைச்சலில் இருந்தனர். இந்நிலையில், இருவரும் கடந்த 9ம் தேதி, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சைக்குப் பின், நேற்று முன்தினம் ஷகீலா பேகம் டிஸ்சார்ஜ் ஆனார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அசைன்கான், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். போத்தனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

