/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனைவி தற்கொலை வழக்கில் கணவனுக்கு 5 ஆண்டுசிறை
/
மனைவி தற்கொலை வழக்கில் கணவனுக்கு 5 ஆண்டுசிறை
ADDED : ஜன 30, 2025 11:27 PM
கோவை: மனைவி தற்கொலை வழக்கில், கணவனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கோவை, கணபதிபுதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 44; இவரது மனைவி சுஜிலட்சுமி,28. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெல்டிங் தொழிலாளியான ஆனந்தகுமார், தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். வெல்டிங் வேலை இல்லாத நேரத்தில், அவருக்கு குடிப்பதற்கு பணம் இல்லை. இதனால், மனைவி சுஜி லட்சுமியின் தந்தையிடம் பணம் வாங்கி வருமாறு கொடுமை படுத்தி வந்துள்ளார். வீட்டுக்கு செலவுக்கும் பணம் இல்லாததால், சுஜிலட்சுமி குழந்தைககளை கவனிக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளானர்.
கடந்த, 2016, நவ., 24ல், கணவன் - மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுஜி லட்சுமி, கணவன் முன்பே, கதவை பூட்டிகொண்டு, துாக்கிட்டு தற்கொலை செய்தார். சரவணம்பட்டி போலீசார் விசாரித்து, மனைவியை தற்கொலைக்கு தூண்டிய ஆனந்தகுமாரை கைது செய்தனர். அவர் மீது கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி நந்தினிதேவி, குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தகுமாருக்கு, ஐந்தாண்டு சிறைதண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிஷா ஆஜரானார்.