/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு 5 ஆண்டு சிறை
/
மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : பிப் 01, 2025 01:56 AM
கோவை; கோவை, சுந்தராபுரம், சாரதாமில் ரோடு முதலியார் வீதியில் வசித்து வருபவர் விக்ரமன்,65. இவரது மகன், மகளுக்கு திருமணமாகி தனிக்குடித்தனம் சென்று விட்டதால், மனைவி சுசீலாவுடன்,60, வசித்தார். விக்ரமனுக்கு, 40 ஆண்டுக்கும் மேலாக மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றதால், சில ஆண்டுகள் குடிக்காமல் இருந்தவர், மீண்டும் குடிபழக்கத்திற்கு அடிமையானார்.
மது குடித்து விட்டு வந்த விக்ரமனை, வீட்டிற்குள் அனுமதிக்க சுசீலா மறுத்ததால் வரண்டாவில் துாங்கினார். இதனால் கோபமடைந்து , 2022 அக்., 25ல், மனைவி சசீலாவை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். தீவிர சிகிக்சைக்கு பிறகு, சுசீலா உயிர் பிழைத்தார். போத்தனுார் போலீசார் விக்ரமனை கைது செய்தனர்.
அவர் மீது, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி நந்தினிதேவி, விக்ரமனுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிஷா ஆஜரானார்.