/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நான் டாடா பிர்லா இல்லை'; நீலகிரி எம்.பி., காட்டம்
/
'நான் டாடா பிர்லா இல்லை'; நீலகிரி எம்.பி., காட்டம்
'நான் டாடா பிர்லா இல்லை'; நீலகிரி எம்.பி., காட்டம்
'நான் டாடா பிர்லா இல்லை'; நீலகிரி எம்.பி., காட்டம்
ADDED : பிப் 18, 2025 06:52 AM

அன்னுார்; இலவச வீடு கேட்ட பெண்களிடம், 'நான் டாடா, பிர்லா இல்லை,' என நீலகிரி எம்.பி., ராஜா, கோரிக்கை மனு அளித்த பெண்களிடம் ஆவேசமாக பதில் அளித்ததால், பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்க நீலகிரி எம்.பி., ராஜா நேற்று வந்தார்.
அன்னுார் அரசு மருத்துவமனை வளாகத்தில், சொக்கம்பாளையம் மற்றும் செல்லனுர் காலனியைச் சேர்ந்த பெண்கள், 'எங்களது வீடுகள் 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் விழும் அபாய நிலையில் உள்ளன. உடனே வேறு வீடு கட்டித் தர வேண்டும்,' என்றனர்.
எம்.பி., ராஜா உடனே தொலைபேசியில் அன்னூர் தாசில்தாரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கும் படி கூறினார்.
அதன் பிறகும், பெண்கள், 'எங்களுக்கு கண்டிப்பாக வீடு மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வேண்டும்,' என்றனர்.
இதனால் எரிச்சலடைந்த ராஜா, ''நான் டாட்டா, பிர்லா இல்லை. உங்களை போல நானும் சாதாரணமானவன் தான். எனவே திரும்பத் திரும்ப இது குறித்து பேசாதீர்கள்,'' என்றார். ராஜாவின் பதிலால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் விழாவில் பேசிய எம்.பி., ராஜா ''மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி தர மறுக்கிறது. அனைத்து கட்சிகளும் மத்திய அரசு நிதி தராததை கண்டித்துள்ளன,'' என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.