sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'நான் முதல்வன் உயர்வுக்குப்படி'

/

'நான் முதல்வன் உயர்வுக்குப்படி'

'நான் முதல்வன் உயர்வுக்குப்படி'

'நான் முதல்வன் உயர்வுக்குப்படி'


ADDED : செப் 27, 2024 11:18 PM

Google News

ADDED : செப் 27, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: 'நான் முதல்வன் உயர்வுக்குப்படி' திட்டத்தின் கீழ், உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நடந்தது.

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தாசில்தார் சிவக்குமார் தலைமை வகித்தார். நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் பெரியசாமி வரவேற்றார்.

அதிகாரிகள் பேசியதாவது:

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்க்கொண்டு வருகிறது. துவக்கப்பள்ளி முதல் கல்லுாரி வரையில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க ஆசிரியர்களும் போதிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பள்ளி, கல்லுாரிகளில் சேர்ந்து படிக்காத மாணவர்கள், மீண்டும் பள்ளிப்படிப்பை தொடரும் வகையில், நான் முதல்வன் உயர்வுக்குப்படி திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us