/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நான் முதல்வன் உயர்வுக்குப்படி'
/
'நான் முதல்வன் உயர்வுக்குப்படி'
ADDED : செப் 27, 2024 11:18 PM

வால்பாறை: 'நான் முதல்வன் உயர்வுக்குப்படி' திட்டத்தின் கீழ், உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நடந்தது.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தாசில்தார் சிவக்குமார் தலைமை வகித்தார். நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் பெரியசாமி வரவேற்றார்.
அதிகாரிகள் பேசியதாவது:
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்க்கொண்டு வருகிறது. துவக்கப்பள்ளி முதல் கல்லுாரி வரையில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க ஆசிரியர்களும் போதிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பள்ளி, கல்லுாரிகளில் சேர்ந்து படிக்காத மாணவர்கள், மீண்டும் பள்ளிப்படிப்பை தொடரும் வகையில், நான் முதல்வன் உயர்வுக்குப்படி திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.