sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

‛ஐகான் ஆப் கேன்சர் கேர்- 2025 நால்வரின் பங்களிப்புக்கு விருது

/

‛ஐகான் ஆப் கேன்சர் கேர்- 2025 நால்வரின் பங்களிப்புக்கு விருது

‛ஐகான் ஆப் கேன்சர் கேர்- 2025 நால்வரின் பங்களிப்புக்கு விருது

‛ஐகான் ஆப் கேன்சர் கேர்- 2025 நால்வரின் பங்களிப்புக்கு விருது


ADDED : ஆக 25, 2025 10:09 PM

Google News

ADDED : ஆக 25, 2025 10:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை பி.எஸ்.ஜி. ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தின் ஐந்தாம் ஆண்டு விழா, மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது.

மையத்தின் இயக்குனர் பாலாஜி வரவேற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார், பி.எஸ்.ஜி. சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் ஆகியோர் பேசினர்.

புதிதாக இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது. இந்தியாவில், புற்றுநோய் பராமரிப்பு துறையில் முன்னோடி பங்களிப்புகளை மேற்கொண்ட சிறந்த மருத்துவ வல்லுனர்களுக்கு, 'ஐகான் ஆப் கேன்சர் கேர்' விருது வழங்கப்பட்டது.

கோல்கட்டா டாடா மெடிக்கல் சென்டர் முன்னாள் இயக்குனரான, பத்மஸ்ரீ டாக்டர் மாம்மன் சன்னி, பெங்களூரு யெனபோயா பல்கலை துணைவேந்தர் விஜயகுமார், மும்பை டாடா மெமோரியல் மருத்துவமனை இயக்குனர் ப்ரமேஷ், அசாம் சில்சார் காசார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனரான பத்மஸ்ரீ ரவி கண்ணன் ஆகியோருக்கு, விருதுகள் வழங்கப்பட்டன.

மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி முதல்வர் சுப்பா ராவ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us