ADDED : மார் 18, 2024 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, மூன்று ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை விட, மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டு, 34 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 13 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பகுதிகளிலும் கடுமையான வெயில் நிலவி வருகிறது. இளநீர் கிடைக்காமல் வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, தரமான இளநீரை எந்த காரணத்தை கொண்டும், குறைந்த விலைக்கு விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தொடர்ந்து, இளநீரின் விலை உறுதியாக உயரும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

