sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இளநீர் பண்ணை விலை; இரண்டு ரூபாய் உயர்வு

/

இளநீர் பண்ணை விலை; இரண்டு ரூபாய் உயர்வு

இளநீர் பண்ணை விலை; இரண்டு ரூபாய் உயர்வு

இளநீர் பண்ணை விலை; இரண்டு ரூபாய் உயர்வு


ADDED : பிப் 12, 2024 12:18 AM

Google News

ADDED : பிப் 12, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, இரண்டு ரூபாய் உயர்ந்துள்ளது.

ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:

கடுமையான கோடை இப்போதே துவங்கிவிட்டது. ஈரோடு போன்ற பல பகுதிகளில் தற்போது வெயில் சதம் அடித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் பனியின் தாக்கம் இல்லை. கடந்தாண்டுகளை ஒப்பிடுகையில் நடப்பாண்ட இளநீர் உற்பத்தி மிகவும் குறைந்து காணப்படுகிறது.

எனவே, இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையை விட, இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டு, 24 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஒரு டன் இளநீரின் விலை, 8,750 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தரமான இளநீருக்கு இப்போதே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, இளநீரை குறைந்த விலைக்கு விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us