/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளையராஜா இசை நிகழ்ச்சி கோவைபுதுாருக்கு இடமாற்றம்
/
இளையராஜா இசை நிகழ்ச்சி கோவைபுதுாருக்கு இடமாற்றம்
ADDED : ஏப் 15, 2025 07:01 AM
போத்தனூர்; கோவையில் மே 17ல் நடக்கவுள்ள, இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, கோவைபுதூர் அருகே நடக்கும் என, ஏற்பாட்டாளர் மவுனராகம் முரளி கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் மே 17ல்,இளையராஜாவின் நேரலை இசை நிகழ்ச்சி, கொடிசியா மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிகழ்ச்சி, மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதிகம் வரக்கூடும். இதனால் தற்போது நிகழ்ச்சியை, கோவைபுதூர் அருகேயுள்ள ஜி- ஸ்கொயர்வளாகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் இடவசதி செய்யப்படுகிறது. தண்ணீர் முதல் அனைத்து வகையான உணவு கிடைக்கும் வகையில், 'புட் கோர்ட்' அமைக்கப்படுகிறது.
பார்வையாளர்கள் வெளியேற, நான்கு வழிகள் அமைக்கப்படும். ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், கோவைபுதூர் பிரிவு ஆகிய இடங்களிலிருந்து, வாகன வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஓலா, ரெட் டாக்ஸி போன்றவைகளில், நிகழ்ச்சியின் டிக்கெட்டை காண்பித்தால், கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி தரவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இயற்கையான சூழலில், இசைஞானியின் இசையை கேட்க, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.