sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகரில் விதிமீறி வாகனங்கள் நிறுத்தம்; அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்

/

நகரில் விதிமீறி வாகனங்கள் நிறுத்தம்; அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்

நகரில் விதிமீறி வாகனங்கள் நிறுத்தம்; அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்

நகரில் விதிமீறி வாகனங்கள் நிறுத்தம்; அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்


ADDED : ஜூன் 08, 2025 09:56 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 09:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி நகரில், 'நோ -பார்க்கிங்' பகுதி எனத் தெரிந்தும், அங்கு வாகனங்கள் நிறுத்துவதை பலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களில், வாகனங்கள் நிறுத்தம் செய்ய போதிய பார்க்கிங் வசதிகள் இல்லை. வாகன ஓட்டுநர்கள், வாகனங்களை ரோட்டிலேயே தாறுமாறாக நிறுத்திச்செல்லும் நிலை உள்ளது.

இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும், 'நோ - பார்க்கிங்' என தெரிந்தும், வாகனங்கள் நிறுத்தம் செய்வதால் நெரிசல் ஏற்படுகிறது. கடந்த இரு தினங்களாக, விசேச நாட்களாக இருந்தால், நகரில் வாகன போக்குவரத்து அபரிவிதமாக இருந்தது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி நகரில், 'நோ - பார்க்கிங்' பகுதிகள் என கண்டறிந்து அங்கு போலீசார், எச்சரிக்கை அறிவிப்பு போர்டு வைத்து, வாகனங்களை நிறுத்தினால், அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, பல இடங்களில், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தம் செய்வதை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட பகுதியிலேயே, தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம் செய்யப்படுகின்றன.

இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தவிர, ஓட்டல்கள், வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்தம் செய்ய போதிய வசதிகள் இல்லாததால், காலியாக உள்ள இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

எனவே, 'நோ பார்க்கிங்' பகுதியில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக நிறுவனங்கள், நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களை தனித்தனியாக நிறுத்த, வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us