/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை வெயிலின் தாக்கம் இளநீர் விலை ரூ. 1 உயர்வு
/
கோடை வெயிலின் தாக்கம் இளநீர் விலை ரூ. 1 உயர்வு
ADDED : மே 04, 2025 10:29 PM
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு ரக இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 47 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 250 ரூபாய் உயர்த்தப்பட்டு, 19 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநீர் விற்பனையாகும் அனைத்து பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலை, 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வருகிறது.
எனவே, இளநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதேநேரம், இளநீர் வரத்து குறைந்தே காணப்படுகிறது. எனவே, இளநீரை குறைந்த விலைக்கு விற்க வேண்டாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.