sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முக்கிய பணியிடங்கள் காலி! மாநகராட்சி அலுவல் பணி தொய்வு

/

முக்கிய பணியிடங்கள் காலி! மாநகராட்சி அலுவல் பணி தொய்வு

முக்கிய பணியிடங்கள் காலி! மாநகராட்சி அலுவல் பணி தொய்வு

முக்கிய பணியிடங்கள் காலி! மாநகராட்சி அலுவல் பணி தொய்வு


ADDED : பிப் 16, 2024 01:55 AM

Google News

ADDED : பிப் 16, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மாநகராட்சியில் இரண்டு உதவி கமிஷனர், நகர பொறியாளர், நகர் நல அலுவலர் உள்ளிட்ட முக்கியமான பணியிடங்கள் காலியாக இருப்பதால், கீழ்நிலை அலுவலர்களே கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர்.

தமிழக அரசு பிறப்பித்த அரசாணை: 152ன் படி, கோவை மாநகராட்சிக்கு, 301 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் எட்டு உதவி கமிஷனர் பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், உதவி கமிஷனர் கணக்கு, உதவி கமிஷனர் வருவாய் ஆகிய இரு முக்கியமான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

திருப்பூருக்கு இட மாறுதல் செய்யப்பட்ட உதவி கமிஷனர் கணக்கு மாணிக்கம், தற்போது வரை கோவையிலேயே பணிபுரிகிறார். உதவி கமிஷனர் வருவாய் பணியிடத்துக்கு, நிர்வாக அலுவலர் மதுசூதனன் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.

இதேபோல், நகர் நல அலுவலர் பணியிடம் காலியாக இருக்கிறது. உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகர் கூடுதலாக கவனிக்கிறார்.

நகர பொறியாளர் பணியை, நிர்வாக பொறியாளர் முருகேசனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு, கீழ் நிலை அதிகாரிகளுக்கு உயர் பதவி வழங்கப்பட்டு, கோப்புகளில் கையெழுத்து பெறப்படுகிறது.

மேலும், மாமன்ற செயலர் பணியிடம், உதவி நகரமைப்பு அலுவலர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இரண்டு மண்டலத்துக்கு உதவி நகரமைப்பு அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால், ஒரே அதிகாரி கூடுதலாக கவனிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமிக்கு, மத்திய மண்டலமும் கூடுதலாக ஒதுக்கப்பட்டு இருப்பதால், 40 வார்டுகளுக்கு இவர் ஒருவரே பொறுப்பு.

கிழக்கு மண்டலத்தில் உதவி பொறியாளராக பணிபுரியும் குமாருக்கு, 20 வார்டுகளை கவனிக்கும் உதவி நகரமைப்பு அலுவலர் பணியிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வடக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் எழில், உதவி நிர்வாக பொறியாளர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கிறார்.

இதேபோல், கிழக்கு மண்டல நிர்வாக அலுவலர், கணக்குப்பிரிவு நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

பொறியியல் பிரிவில் துணை மாநகர பொறியாளர் என்கிற பதவி புதிதாக உருவாக்கப்பட்டு, மூன்று பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டன; இப்பணியிடம் பூர்த்தி செய்யப்படவில்லை. உதவி நகரமைப்பு அலுவலர் பணியிடத்துக்கு மண்டலத்துக்கு இருவர் வீதம், 10 பணியிடங்கள் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டது. தற்போது மூன்று பேரே பணிபுரிகின்றனர்.

இவ்வாறு ஏராளமான பணியிடங்கள் காலியாக இருப்பதால், கீழ் நிலை அலுவலர்களே கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். இதன் காரணமாக, அலுவல் பணி தொய்வடைந்து வருகிறது.

இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''மாநகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் கவனத்துக்கு கொண்டு சென்று விட்டோம். விரைவில் நியமிப்பதாக கூறியுள்ளார்,'' என்றார்.






      Dinamalar
      Follow us