sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில்... 92 சதவீதம் தேர்ச்சி!வரும் கல்வியாண்டில் 100 சதவீதம் இலக்கு

/

கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில்... 92 சதவீதம் தேர்ச்சி!வரும் கல்வியாண்டில் 100 சதவீதம் இலக்கு

கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில்... 92 சதவீதம் தேர்ச்சி!வரும் கல்வியாண்டில் 100 சதவீதம் இலக்கு

கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில்... 92 சதவீதம் தேர்ச்சி!வரும் கல்வியாண்டில் 100 சதவீதம் இலக்கு


UPDATED : மே 10, 2024 10:41 PM

ADDED : மே 10, 2024 10:40 PM

Google News

UPDATED : மே 10, 2024 10:41 PM ADDED : மே 10, 2024 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவர்கள், 89 சதவீதம், மாணவியர், 95 சதவீதம் என, மொத்தம், 92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் துவங்கி, கடந்த மாதம் நிறைவடைந்தது. தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த மாதம் நடைபெற்றன. இந்நிலையில் நேற்று காலை, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, 74 அரசுப்பள்ளிகளில், 2,160 மாணவர்கள், 2,297 மாணவியர் என மொத்தம், 4,457 பேர் தேர்வு எழுதினர். அதில், 1,796 மாணவர்கள், 2,140 மாணவியர் என மொத்தம், 3,936 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 83 சதவீதமும், மாணவியர், 93 சதவீதம் என, அரசுப்பள்ளிகள் மொத்தம், 88 சதவீதம், தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசு உதவி பெறும் பள்ளிகள்


கல்வி மாவட்டத்தில் மொத்தம், 10 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. அதில், 338 மாணவர்கள், 578 மாணவியர் என மொத்தம், 916 பேர் தேர்வெழுதினர். அவர்களில், மாணவர்கள், 314, மாணவியர், 564 என மொத்தம், 878 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 93 சதவீதம், மாணவியர், 98 சதவீதம் என, மொத்தம், 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

நகராட்சி பள்ளிகள்


பொள்ளாச்சி நகராட்சியில், மூன்று பள்ளிகளில், மாணவர்கள், 181, மாணவியர், 123 பேர் தேர்வெழுதினர். அதில், 127 மாணவர்கள், 86 மாணவியர் என மொத்தம், 213 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், மாணவியர் தலா, 70 சதவீதம் என மொத்தம், 70 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

மெட்ரிக் பள்ளிகள்


கல்வி மாவட்டத்தில், 63 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. அதில், 1,733 மாணவர்கள், 1,575 மாணவியர் என மொத்தம், 3,308 பேர் தேர்வெழுதினர். அதில், 1,674 மாணவர்கள், 1,563 மாணவியர் என மொத்தம், 3,237 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 97 சதவீதம், மாணவியர், 99 சதவீதம், என மொத்தம், 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கல்வி மாவட்டம்


இத்தேர்வினை எழுத மாணவர்கள், 4,412, மாணவியர், 4,573 என மொத்தம், 8,985 பேர் விண்ணப்பித்தனர். அதில், மாணவர்கள், 3,911, மாணவியர், 4,353 என மொத்தம், 8,264 பேர் தேர்வெழுதினர். மாணவர்கள், 501, மாணவியர், 220 என மொத்தம், 721 பேர் தேர்ச்சி பெறவில்லை.

அதில், மாணவர்கள், 89 சதவீதம், மாணவியர், 95 சதவீதம் என மொத்தம், 92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.பத்தாம் வகுப்பு தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவியர் தேர்ச்சி சதவீதமே அதிகரித்து காணப்பட்டது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளோம். தொடர்ந்து பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து சிறப்பு வகுப்புகள், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டது.

கல்வி மாவட்டத்தில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம், 56 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. வரும் கல்வியாண்டில், 100 சதவீதம் தேர்ச்சி இலக்கை அடைய முயற்சிகள் எடுக்கப்படும்,' என்றனர்.

உயர்கல்வியில் கவனம் செலுத்துங்க!

பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் பாலமுருகன், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.அவர் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியானது, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்கள், குடும்ப சூழல் காரணங்களை கூறி பிளஸ் 1, பிளஸ் 2படிக்காமல் இருக்க கூடாது. எந்த பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்க வேண்டும் என திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர, கல்லுாரி படிப்பையும் தொடர வேண்டும்.பிளஸ் 1ல் அறிவியல் பிரிவு, கலைப்பிரிவு எதுவாக இருந்தாலும், தேர்வு செய்த பிரிவில் முழுகவனம் செலுத்தி படித்து, அதிக மதிப்பெண் பெற வேண்டும். அரசுப்பள்ளிகளையே தேர்வு செய்து படிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us