ADDED : மார் 13, 2026 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்: நெகமம், பனப்பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2024 - 25ல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., தினகரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பேசினார்.
இதில், பள்ளி தலைமை ஆசிரியர் கதிர்வேல், பி.டி.ஏ. தலைவர் கார்த்திகேயன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாணவர்கள் அனைவரும் நன்கு படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.

