/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு; பலவீனத்துக்கு ஏற்ப பயிற்சி
/
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு; பலவீனத்துக்கு ஏற்ப பயிற்சி
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு; பலவீனத்துக்கு ஏற்ப பயிற்சி
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு; பலவீனத்துக்கு ஏற்ப பயிற்சி
ADDED : அக் 09, 2024 10:13 PM
பொள்ளாச்சி : அரசு பள்ளிகளில், கடந்த திருப்புதல் தேர்வை ஒப்பிடுகையில், காலாண்டு தேர்வில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், கடந்த மாதம் காலாண்டு தேர்வு நடந்தது. அதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில், இந்த தேர்வு நடத்தப்பட்டது.
குறிப்பாக, 60 சதவீத பாடங்களை மையப்படுத்தி தேர்வு நடத்தப்பட்ட நிலையில், கடந்த திருப்புதல் தேர்வை ஒப்பிடுகையில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், 70 முதல் 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
வழக்கமாக, பொதுத்தேர்வு அட்டவணை வெளியானாலே, 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு படபடப்பு தொடங்கிவிடும். இதனை தவிர்க்கும் விதமாக, பள்ளிகளில், திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
அதன்படி, காலாண்டு தேர்வில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. அதேநேரம், அரையாண்டு தேர்வில் முழு பாடங்களுக்கும் எழுத வேண்டும். அப்போது, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் சற்று குறைய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து, முழு திருப்புதல் தேர்வை எதிர்கொள்ளும்போது, மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகி விடுவர். அதன்படி, தற்போதைய காலாண்டு தேர்வின் மதிப்பெண்களைக் கொண்டு, மாணவர்களின் தற்போதைய கற்றல் திறன் கணக்கிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் பலவீனத்திற்கு ஏற்ப , அந்தந்த பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.