sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

/

 வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

 வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

 வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு


ADDED : டிச 12, 2025 05:08 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: கோத்தகிரி, மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது. இதனால் சாலை ஓரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியை ஒட்டி கோத்தகிரி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன.

இப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக, வனப்பகுதிகள் முழுவதும் பசுமையாக காட்சியளிக்கின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு செல்லும் சாலையில், சாலையோரம் உள்ள பசுந்தீவனங்களை மேய்வதற்கு வனவிலங்குகள் அதிகம் வருகின்றன. இச்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், ''சுற்றுலா பயணிகள், வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது. மிகவும் கவனமாக செல்ல வேண்டும். வாகனத்தை சாலை ஓரங்களில் நிறுத்தக்கூடாது,'' என்றனர்.






      Dinamalar
      Follow us