sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அதிகரிக்கும் விளம்பர பலகைகள்; தூக்கத்தில் மாநகராட்சி அதிகாரிகள் இரும்பு சட்டங்களையும் அறுத்தெடுத்து அகற்ற எதிர்பார்ப்பு

/

 அதிகரிக்கும் விளம்பர பலகைகள்; தூக்கத்தில் மாநகராட்சி அதிகாரிகள் இரும்பு சட்டங்களையும் அறுத்தெடுத்து அகற்ற எதிர்பார்ப்பு

 அதிகரிக்கும் விளம்பர பலகைகள்; தூக்கத்தில் மாநகராட்சி அதிகாரிகள் இரும்பு சட்டங்களையும் அறுத்தெடுத்து அகற்ற எதிர்பார்ப்பு

 அதிகரிக்கும் விளம்பர பலகைகள்; தூக்கத்தில் மாநகராட்சி அதிகாரிகள் இரும்பு சட்டங்களையும் அறுத்தெடுத்து அகற்ற எதிர்பார்ப்பு


ADDED : டிச 19, 2025 05:07 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

(படங்கள் உள்ளன)

கோவை: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் சந்திப்புகள் மற்றும் திருப்பங்களில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது. அதை மீறி கோவை மாநகராட்சி பகுதியில், அவிநாசி ரோடு, பொள்ளாச்சி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, செல்வபுரம் ரோடு என அதிக போக்குவரத்துள்ள அனைத்து ரோடுகளிலும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

அவிநாசி ரோடு மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலம், டெக்ஸ்டூல் மேம்பாலம், நஞ்சுண்டாபுரம் மேம்பாலம், கவுண்டம்பாளையம் மேம்பாலம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலங்களில் செல்லும்போது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகின்றன. சாலை விதிகளின் படி, ரோட்டுக்கு அருகிலும், கட்டடங்களின் மேற்பரப்பிலும் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது.

ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி விதிகளின் படி, விளம்பர பலகைகள் வைக்க மாநகராட்சி அனுமதி அளித்து வருகிறது. சில இடங்களில் அனுமதி எண்களுடன் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் அனுமதியின்றி விதிமுறையை மீறி வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றாமல் இருக்கின்றனர்.

அவிநாசி ரோட்டில் ஹோப் காலேஜில் இருந்து சிங்காநல்லுார் செல்லும் காமராஜ் ரோட்டில் வழிநெடுக விளம்பர பலகைகள் காணப்படுகின்றன. பீளமேடு பஸ் ஸ்டாப் அருகே தென்படுகின்றன. அவிநாசி ரோடு மேம்பாலம் 'ரவுண்டானா' சுற்றுப்பகுதி மற்றும் இருபுறமும் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆத்துப்பாலம் சந்திப்பில் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் இரு விளம்பர பலகைகள் உள்ளன. ஆத்துப்பாலம் சந்திப்பு, கரும்புக்கடை, குறிச்சி பிரிவு, குறிச்சி குளக்கரை எதிரே உள்ள கட்டடங்களில் அனுமதியற்ற விளம்பர பலகைகள் காணப்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன், அவிநாசி ரோடு பழைய பாலத்தில் இருந்து ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டுக்கு செல்லும் வழித்தடத்தில் வலதுபுறம் இருந்த மூன்று விளம்பர பலகைகள் இரும்பு சட்டங்களை அறுத்தெடுத்து அகற்றப்பட்டன. தற்போது இரும்பு சட்டங்கள் நிறுவி மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்ற நகரமைப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பேனர் கிழிப்பு; இரும்பு சட்டம் இருப்பு

மேட்டுப்பாளையம் ரோட்டில் வெங்கடேஸ்வரா நகர், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம் தேவாங்க நகர், துடியலுார், ஆர்.எஸ்.புரம் மருதமலை ரோடு, ஜி.என்.மில்ஸ் உள்ளிட்ட 33 இடங்களில் இருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன, என அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு மண்டலத்தில் 13 இடங்களில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர். ஆனால் பிளக்ஸ் பேனர்கள் மட்டும் கிழிக்கப்பட்டிருக்கின்றன. இரும்பு சட்டங்கள் அப்படியே இருக்கின்றன. அவற்றை எடுக்காவிட்டால், சில நாட்களில் மீண்டும் பேனர்கள் வந்துவிடும். சட்டவிரோதமாக பொருத்திய இரும்பு சட்டங்களையும் உடனுக்குடன் அறுத்தெடுத்தால் மட்டுமே பேனர்கள் மீண்டும் மீண்டும் முளைப்பது தடுக்கப்படும்.








      Dinamalar
      Follow us